சென்னை: நீதிமன்றங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி நன்றி என பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்தார். இந்தியாவிலேயே சிறந்த வழக்கறிஞர்கள் சமூகத்தில் சென்னை வழக்கறிஞர்கள் சமூகமும் ஒன்று என தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்தார். சக நீதிபதிகள் தனக்கு மிகப்பெரிய பலமாகவும்,நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை உதவியாகவும் இருந்தனர். அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது மிகுந்த திருப்தியை தருகிறது எனவும் கூறினார்….