கோவை, மார்ச் 12: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இப்ராகீம், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை உக்கடம் புல்லுக்காடு சிட்டி பார்க் பகுதியில் என நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து 4.30 ஏக்கர் நிலத்தை வாங்கி, சைட் பிரித்து விற்பனை செய்தோம். இதில், எனக்கு சொந்தமான 6 சைட் மீதம் உள்ளது.
இதை, ஜி.எம்.நகரை சேர்ந்தவர் தனது மனைவி மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து போலியாக ஆவணம் தயாரித்து, நிலம் மோசடி செய்து, என்னிடமிருந்து அபகரித்துக்கொண்டனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சார்-பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். மனுவை பரிசீலனை செய்த கலெக்டர், இதுபற்றி உரிய விசாரணை நடத்தும்படி மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்துள்ளார்.