திருப்பூர்:திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (30). இவருக்கு திருமணமாகி சந்திரா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். மனோஜ் அந்த பகுதியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மனோஜ் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.