காரைக்குடி, ஜூன் 9: காரைக்குடியில் நவீன எரிவாயு தகமேடை அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. செயலாளர் சாமி திராவிடமணி வரவேற்றார். துணைத்தலைவர் பெரியண்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் கண்ணப்பன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் இதுவரை தலைவராக இருந்த சத்தி திருநாவுக்கரசு மறைவுக்கு பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய தலைவராக பெரியணன், செயலாளராக சாமி திராவிடமணி, பொருளாளராக கண்ணப்பன், துணைத்தலைவராக காசி விசுவநாதன், துணைச் செயலாளராக முத்து, துணை பொருளாளராக தேனப்பன், தணிக்கையாளராக ஆடிட்டர் இளைய பெருமாள், செயற்குழு உறுப்பினர்களாக ராகவன் செட்டியார், அருணகிரி, அமுத்து, முத்தையா, அழகியசுந்தரம், சோலை, வெங்கடாசலம் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டுதோறும் மே மாதம் பொதுக்குழு கூட்டம், ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழு கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.