Thursday, May 9, 2024
Home » நாயை அடித்து கொன்றவர்கள் கைது

நாயை அடித்து கொன்றவர்கள் கைது

by Karthik Yash

வடமதுரை, மார்ச் 28: வடமதுரை அருகே தும்மலக்குண்டு ரோட்டில் உள்ள பால்கனி மேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் (42). சமையல் தொழிலாளி. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே ஈஸ்வரன் (37) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் அடிக்கடி பாண்டியம்மாள் வளர்க்கும் நாயை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாண்டியம்மாள் வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டின் அருகே படுத்திருந்த பாண்டியம்மாளின் நாயை ஈஸ்வரன், தனது நண்பர் மணியுடன் சேர்ந்து இரும்பு தாக்கியால் தாக்கி கொன்று விட்டு அருகிலுள்ள குளத்தில் வீசியுள்ளார். இதுபற்றி அருகில் இருந்தவர்கள் பாண்டியம்மாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பாண்டியம்மாள் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ சித்திக் வழக்குப்பதிந்து ஈஸ்வரன், மணியை கைது செய்தார்.

You may also like

Leave a Comment

3 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi