ராசிபுரம், பிப்.6: ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தாசில்தார், 5 வருவாய் ஆய்வாளர்கள், 52 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். மேலும், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்கள் உள்ள நிலையில், அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள், இடங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்
previous post