நாசரேத்: நாசரேத் மர்காஷிஸ் ரோட்டை சேர்ந்தவர் பூக்குமார். இவரது மனைவி நித்தியா(36). தம்பதி இருவரும் நாசரேத் பகுதியில் சாலையோரம் பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நித்தியா நாசரேத் பஸ் நிலையம் அருகில் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த பைக், நித்தியா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாசரேத்தில் பைக் மோதி பெண் படுகாயம்
previous post