நாகர்கோவில், ஜூலை 25 : நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்கள் தவிர வேறு தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்று ஐகோர்ட் அனுப்பி உள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். அம்பேத்கர் படங்கள், சிலைகள் நீதிமன்றங்களில் இடம்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் – குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாகர்கோவில் அம்பேத்கர் சிலை முன் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜானி தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகர செயலாளர் வக்கீல் கணேசன் முன்னிலை வகித்தார். மாநில வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் திலீப் சிங் மற்றும் வழக்கறிஞர்கள் அருள்மாறன், ஜெகன், அணில் குமார், அப்துல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் அம்பேத்கர் சிலை முன் வி.சி.க ஆர்ப்பாட்டம்
previous post