தர்மபுரி, மே 22: பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்யும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் உட்தணிக்கை குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். பென்னாகரம், நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பராமரிப்பு, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுதிட்டத்தின் கீழ், இருவழித்தடத்தை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல் பணி முடிவுற்றது. இப்பணியினை சேலம், நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கண்காணிப்புப் பொறியாளர் அருள்மொழி தலைமையில் உட்தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்டப் பொறியாளர் தாமரைச்செல்வி, உதவி பொறியாளர்கள் வடிவரசி, மும்தாஜ் மற்றும் தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்ட பொறியாளர் நாகராஜூ, உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், பென்னாகரம், இளநிலை பொறியாளர், தமிழரசு, தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி, உதவி பொறியாளர்கள் இனியன், ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.