சென்னை: நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் இணையதளத்தில் வருகிற 30ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி ெவளியிட்ட அறிவிப்பு: புதுடெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையின் கடிதத்தின்படி 2022ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கான தகுதியுள்ள ஆசிரியர்கள் நேரடியாக (http://nationalawardstoteachers.education.gov.in) என்ற இணையதளத்தில், வருகிற 30ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….