ஹாசன்: ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரில் நண்பரை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர் தாலுகாவில் உள்ள பாலுப்பேட்டையை சேர்ந்தவர் அனில் ராஜ்(22) மற்றும் பிரசாத். இருவரும் நண்பர்கள், சம்பவத்தன்று அனில்ராஜ் மற்றும் பிரசாத் இருவரும் பிறந்தநாள் விழாவிற்கு சென்றிருந்தனர். வீடு திரும்பியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் பிரசாத் அனிலை தாக்கியுள்ளார். இதில் அனிலுக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். பிரசாத் தனது தாய் தங்கை மற்றும் உறவினர் மோகன் என்பவருக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர்களின் உதவியுடன் வீட்டின் பின்புறத்தில் பள்ளம் தோண்டி அனிலை புதைத்துள்ளனர்.வெகுநேரம் ஆகியும் அனில் வீடு வராததால் அவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார். பிறந்தநாள் விழாவிற்கு அனிலுடன் சென்ற பிரசாத்திடம் விசாரணை மேற்கொள்ள முயன்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் அவரின் வீட்டில் இருந்த ரத்தகறையை கொண்டு அனிலின் உடலை போலீசார் மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பிரசாத், அவரின் தாய் மற்றும் தங்கை உறவினர் மோகன் ஆகியோரை ஹாசன் போலீசார் புதிய பேருந்து நிறுத்தம் அருகே கைது செய்தனர்….
நண்பர் கொலை 4 பேர் சிக்கினர்
previous post