Friday, May 17, 2024
Home » நடிகை சினேகா- பிரசன்னா தம்பதியினர் சுவாமி தரிசனம் வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில்

நடிகை சினேகா- பிரசன்னா தம்பதியினர் சுவாமி தரிசனம் வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில்

by Karthik Yash

பள்ளிகொண்டா, அக்.18: வேலூர் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் நடிகை சினேகா- பிரசன்னா தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தவர் சிரிப்பழகி சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நவராத்திரியையொட்டி சிேனகா- பிரசன்னா தம்பதியினர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வேலூரில் புரம் தங்க கோயிலுக்கு நேற்று முன்தினம் வருகை தந்தனர். அங்கு அவர்கள் நாராயணி அம்மன் மற்றும் தங்கத்தினால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்து மனமுருக வழிபட்டனர்.

தொடர்ந்து, பொற்கோயிலில் சக்தி அம்மாவை சந்தித்து சினேகா- பிரசன்னா தம்பதியினர் ஆசி பெற்றனர். அவர்களுக்கு சக்தி அம்மா நல்லாசி வழங்கி பிரசாதம் வழங்கினர். இதனையடுத்து, சிேனகா- பிரசன்னா குடும்பத்தினர் பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்த சினேகா- பிரசன்னா தம்பதியினர் கோயில் பிரகாரம், ராஜகோபுரத்தை சுற்றி வந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் செய்ய நடிகை சிநேகா திடீரென வந்ததால் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

You may also like

Leave a Comment

six − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi