சென்னை: இந்தியில் வெளியான ‘பிங்க்’ என்ற படம், தெலுங்கில் ’வக்கீல் சாப்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. சில வருட இடைவெளிக்குப் பிறகு தனது படம் வெளியானதை தொடர்ந்து, இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பவன் கல்யாண் தொடர்ச்சியாக கலந்துகொண்டார். திடீரென்று அவரது உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இந்நிலையில், தனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து பவன் கல்யாண் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்….