Monday, June 17, 2024
Home » நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் மரணம்

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் மரணம்

by kannappan

மதுரை: உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் நேற்று அதிகாலை இறந்தார்.மதுரை, ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் (30). சினிமா நடிகர். இவரது மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் திடீர் உடல்நல பாதிப்பிற்கு ஆளான இவர், நடக்க முடியாமல் போய், வயிறு, ஈரல் பாதிப்பிற்குள் ஆளானார். கடந்த 4ம் தேதி மதுரை அரசு மருத்துமவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.நடிகர் தீப்பெட்டி கணேசன் அறிமுகமான முதல் படம் ரேணிகுண்டா. அவரது நடிப்பு பேசப்பட்ட நிலையில், பில்லா 2, மக்கள் செல்வன், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த படம் ‘கண்ணே கலைமானே’. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்த இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். ‘மாந்தியா டூ மும்பை’ என்ற கன்னடப்படம், ‘ஜனதா ஹோட்டல்’ என்ற தெலுங்குபடம் ஆகியவற்றிலும் இவர் நடித்துள்ளார்.தற்போது சினிமா வாய்ப்பின்றி பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில், தீப்பெட்டி கணேசன் பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கின்போது பால் வாங்கக்கூட காசு இல்லை என்றுகூறி உதவிகேட்டு இவர் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் இவருக்கு உதவினர்.இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது படங்களில் நடித்த தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா..” எனப் பதிவிட்டுள்ளார். நேற்றுமாலை அவரது இறுதிச்சடங்குகள் நடந்தன.உதயநிதி ஸ்டாலின் அஞ்சலிமதுரை சோலையழகுபுரம் பகுதியில் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாளை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, உடல்நலக்குறைவால், நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணமடைந்த செய்தி, அவருக்கு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தீப்பெட்டி கணேசனின் வீட்டுக்கு சென்றார். அவரது உடலுக்கு உதயநிதி ஸ்டாலின், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்….

You may also like

Leave a Comment

16 + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi