Monday, June 17, 2024
Home » நடிகர் சூர்யா நடிப்பில் இருளர் மக்களின் வாழ்வை வெளிச்சம் போட்டு காட்டிய ‘ஜெய்பீம்’ படத்திற்கு அமோக வரவேற்பு!: சினிமா விமர்சகர்கள் பாராட்டு மழை..!!

நடிகர் சூர்யா நடிப்பில் இருளர் மக்களின் வாழ்வை வெளிச்சம் போட்டு காட்டிய ‘ஜெய்பீம்’ படத்திற்கு அமோக வரவேற்பு!: சினிமா விமர்சகர்கள் பாராட்டு மழை..!!

by kannappan

சென்னை: உண்மை சம்பவங்களை கதை களமாக கொண்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்ருவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேற்று நள்ளிரவில் ஓடிடி தளத்தில் வெளியானது. இருளர் மக்களின் பிரச்னை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல், ஒடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உள்ளிட்டவை திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போன கணவனை கண்டுபிடிக்க பழங்குடியின பெண் நடத்தும் போராட்டம் பார்வையாளர்கள் மீது பல்வேறு கேள்விகளை வீசுகின்றன. ‘ஜெய்பீம்’  திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குநர் தாசி ஞானவேல், அதில் நடித்த சூர்யா உள்ளிட்டோரை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். படத்தின் நினைவுகள் தமது மனதை கனமாக்கிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிட துல்லியமாக, கலைபூர்வமாக காட்சிப்படுத்த முடியாது என்றும் அவர் பாராட்டி இருக்கிறார். ‘ஜெய்பீம்’ படத்தை நள்ளிரவிலேயே கண்டுகளித்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர். ‘ஜெய்பீம்’ போன்று பல கதைகள் இனி வரும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதேபோன்று பல்வேறு இயக்குனர்கள் மற்றும் நடிகர்களும் ‘ஜெய்பீம்’ படம் வெளியான நள்ளிரவிலேயே படத்தை பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்தி வருகின்றனர். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம், தமிழில் தலைசிறந்த படங்களில் முக்கிய இடம்பெறும் என்பதில் ஐயமில்லை….

You may also like

Leave a Comment

fourteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi