சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூலையில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உயர்த்தியதை அடுத்து, தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை குறைவதும், பின் உயர்வதுமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீர் உச்சம் அடைந்து, சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சரிவுடன் காணப்பட்ட தங்கவிலை, 20ம் தேதி மீண்டும் ஏற்றம் கண்டு, ரூ.64 உயர்ந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நகை வாங்க பெரிதும் தயக்கம் காட்டினர். இந்நிலையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. ஆம்! நேற்றைய தினம் சவரன் ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.38,640-க்கும், ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து, ரூ.4,830-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் இன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனையாகிறது. மேலும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.61.10-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.61,100-க்கும் விற்கப்படுகிறது….