விருதுநகர்: மத்திய அரசின் குறு, சிறு தொழில் அமைச்சகம், தென்னை நார் மண்டல அலுவலகம் செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவர் சேவை மையம் இணைந்து 3 நாட்கள் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற பயிற்சியில் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். உடுமலைப்பேட்டை தேங்காய் அமைப்பின் விவசாய பிரிவு மேலாளர் ரகோத்மன் கலந்து கொண்டு தேங்காய் தொழில் அமைப்பில் கிடைக்கப்பெறும் தொழில் வாய்ப்புகள் மற்றும் சேவைகள் குறித்து விளக்கினார்.
தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
previous post