தர்மபுரி, மார்ச் 28: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே இளவடை கிராமத்தில், சுமார் 40வயது மதிக்க தக்கவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற மொரப்பூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கோபு (40) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி மர்ம சாவு
previous post