சேலம்: சேலம் இரும்பாலை பக்கமுள்ள மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ்(24). கட்டிட தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் பர்ன்அன்கோ அருகில் காட்டுப்பக்கம் ஒதுங்கினார். அப்போது திடீரென அங்கு வந்த 3 பேர், அவரை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். தலையில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு
previous post