தேவதானப்பட்டி, ஜூன் 21: தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் வெங்கலவன் என்ற சின்னவர்(50). இவர்களுது பூர்வீக சொத்தை இவரது சகோதரி, இவர்களது ஒப்புதல் இல்லாமல் விற்றதாக கூறப்படுகிறது. இவர்களது பூர்வீக சொத்தை வாங்கிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சுல்தானிடம், வெங்கலவன் என்னுடைய கையெழுத்து இல்லாமல் எப்படி வாங்குவீர்கள் என கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த வெங்கலவன் புகாரில், ஜெயமங்கலம் போலீசார் முகமதுபஷிர், சுல்தான் மீது வழக்குப்பதிந்தனர். முகமது பஷிர் கொடுத்த புகாரில் வெங்கவலன் மீது வழக்கப்பதிந்து கைது செய்தனர்.
சொத்துப் பிரச்னையில் ஒருவர் கைது
previous post