தண்டையார்பேட்டை: பிராட்வே ஆச்சாரப்பன் தெருவை சேர்ந்தவர் கோவர்தன், தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக, சார்ட்டன் முத்தையா தெருவில் எலக்ட்ரிக் கடை உள்ளது. கடந்த வாரம் கோவர்தன், மனைவியுடன் சொந்த ஊரான ராஜஸ்தான் சென்றார். இவர்களது மகன்கள் நந்திஸ் (18) ராகேஷ் (17) ஆகியோர், நேற்று முன்தினம் கடைக்கு சென்று, வீடு திரும்பினர். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பிரோவில் வைத்திருந்த 35 சவரன் நகைகள், ₹4.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இதுபற்றி தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். அவர், எஸ்பினேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்….