தொண்டி, செப்.21: தொண்டி முதல்நிலை பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர்.பட்டினம் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த பேவர் பிளாக் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து எம்.ஆர்.பட்டினம் மற்றும் பி.வி.பட்டினம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஊரணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார். இந்த ஊரணிகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியின் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரண்டு ஊரணிகளையும் விரைவில் சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பேரூராட்சி தலைவர் உறுதியளித்தார்.