சென்னை: சென்னை விருகம்பாக்கம் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (29). பெயின்டரான இவர், கடந்த 24ம் தேதி அசோக்நகர் 7வது அவென்யூ ருக்குமணி தெரு சந்திப்பில் உள்ள டீக்கடை ஒன்றில் தனது பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, தனது பைக் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சுரேஷ் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர்.அதில், தி.நகர் கண்ணம்மாபேட்டை சுப்புபிள்ளை தோட்டத்தை சேர்ந்த பிரபு(32), மேற்கு மாம்பலம் வீரசாமி தெருவை சேர்ந்த சரவணராஜ்(38) என தெரியவந்தது. இருவர் மீதும் சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பிரபு மற்றும் சரவணராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. …