திருத்துறைப்பூண்டி, ஜன. 13: திருத்துறைப்பூண்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சரவணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பாலசுப்பிரமணியன் பேசினார். இரா. வேதரெத்தினம் முருகானந்தம், ரத்தினசாமி, அஜித்தா மகாதேவி, தெ.வேதரெத்தினம், அருளரசு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். போராட்ட விளக்கவுரை ஆற்றி கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தை சுபாஷ் முடித்து வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.