தேவகோட்டை, ஏப்.7: தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய கற்களத்தூர் அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் ஜான்மில்டன் பிராங்கிளின் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை வகித்தார். உதவி வட்டாரக்கல்வி அலுவலர் மாலதி முன்னிலை வகித்து பரிசுகள் வழங்கினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளார் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், ஆசிரியர் பயிற்றுனர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி போதும்பொண்ணு வாழ்த்துரை வழங்கினர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஞானமுத்து நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உதவினார். உதவி ஆசிரியை எமல்டா தேவி நன்றி கூறினார்.