பெரும்புதூர், ஏப்.4: பெரும்புதூர் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ₹1.66 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரும்புதூர் – குன்றத்தூர் சாலை குன்றத்தூர் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குன்றத்தூர் நோக்கி சென்ற காரை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்ததில், ₹1 லட்சத்து 66 ஆயிரத்து 500 இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை காரில் கொண்டு வந்த வீரமணியிடமிருந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தினை பறிமுதல் செய்து, பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவண கண்ணனிடம் ஒப்படைத்தனர். அப்போது, பணத்திற்கான உரிய ஆவணம் அளித்தபிறகு, பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.