அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக தற்போது அமமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக பொருளாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இது விஜயகாந்த் முதல் தேர்தலில் போட்டியிட்ட தொகுதியாகும். இங்கு சென்டிமென்டாக போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்று பிரேமலதா நம்புகிறார். இதற்காக மாநிலம் முழுக்க இருக்கும் தேமுதிக நிர்வாகிகளை களமிறக்கி உள்ளார். தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் இருக்கும் தேமுதிக நிர்வாகிகள் எல்லோரையும் விருத்தாசலம் வரும்படி பிரேமலதா உத்தரவிட்டுள்ளாராம். இதனால் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து மற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விருத்தாசலத்துக்கு படையெடுத்துள்ளனராம். பிரேமலதாவின் இந்த முடிவால் அமமுக போட்டியிடும் மற்ற தொகுதிகளில் தேமுதிகவினர் யாருமே இல்லையாம். முக்கிய நிர்வாகிகள் இல்லாததால் தொண்டர்களும் அமமுகவினர் பிரசாரத்துக்கு செல்வதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்….