புதுக்கோட்டை, மார்ச் 17: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை கண்காணிக்க அரசு வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மாலை 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, தேர்தல் தேதியை அறிவித்ததில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக தேர்தலில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடவும் உள்ளனர். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக படை அலுவலர்களுக்கு வாகனங்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.