நாகர்கோவில், செப்.26 அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தேரூர்பேரூர் வாக்குச்சாவடி பாக முகவர்கள் குழு உறுப்பினர் ஆலோசனை கூட்டம் தேரூர் பேரூர் செயலாளர் முத்து தலைமையில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னிலையில் கவிமணி படிப்பகத்தில் நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்குச்சாவடி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் துணை அமைப்பாளர் பகுதி பொறுப்பாளர் சேக்மீரான் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ஒன்றிய அமைப்பாளர் குலசை முருகன் குலசேகரன் புதூர் கிளை அமைப்பாளர்கள் தங்கப்பன் ராமன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.