ஜெயங்கொண்டம், ஆக.9: ஜெயங்கொண்டத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கழுமலை நாதர் கோயிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீ கழுமலநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நேற்று இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், தேன், உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோல் செங்குந்தபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.