குன்னூர் : குன்னூரில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க குழு அமைத்து விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.தற்போது சமவெளி பகுதிகளில் இருந்தும் யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றப்புற பகுதிகளில் இருந்தும் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு படையெடுத்துள்ளது. கடந்த ஒரு வாரமாக குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள கிளண்டேல் தேயிலை தோட்டம் அருகில் 9 யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது.இவை சுற்றியுள்ள கிராமத்திற்குள் யானைகள் வராமல் இருக்க, வனத்துறை சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் யானைகளுக்கு போதுமான உணவு, தண்ணீர் இருப்பதால், இடம் பெயராமல் அருகில் உள்ள வனப்பகுதியில் தற்போது முகாமிட்டுள்ளது. வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்….