தேனி, ஆக.23: தேனி அல்லிநகரத்தில் நேற்று முன்தினம் இரவு தேமுதிக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் கலந்து கொண்டார். இவரை வரவேற்கும் விதமாக பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் அதிக சப்தத்துடன் வெடிக்கும் வெடிகளை சுமார் 50 அடி தூரத்திற்கு வெடிக்கச் செய்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேனி விஏஓ ஜீவா புகார் அளித்தார். புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் தேமுதிக நகர செயலாளர் முருகராஜா, தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மாயி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.