தேனி, மார்ச் 15: தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இன்று (15ம்தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (15ம்தேதி) காலை 10 மணிக்கு நடக்க உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுனர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதிஉடையவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். எனவே, வேலைநாடுநர்கள் தங்களது பையோ டேட்டா நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவவலக வளாகத்தில் நடக்கும் முகாமில் கலந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.