Monday, May 13, 2024
Home » தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு: பொதுமக்களுக்கு பெருமளவில் உதவி

தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு: பொதுமக்களுக்கு பெருமளவில் உதவி

by Ranjith

 

நீடாமங்கலம், டிச. 24: தென் மாவட்டங்களில் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெருமளவில் உதவி செய்வது என்று நீடாமங்கலம் வர்த்தகர் சங்க அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீடாமங்கலம் வர்த்தகர் சங்க அவசர கூட்டம் அதன் தலைவர் ராஜாராமன் தலைமையில் நடை பெற்றது.செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி கொண்டு நீடாமங்கலம் வர்த்தகர் சங்க அலுவலகத்தில்28ம் தேதி சிறப்பு முகாம் நடத்தி அனைவருக்கும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று தருவது.

நகை கடை, அடகு கடைகளில் திருடர்களை அழைத்து வந்து உரிமையாளர்களை மிரட்டி நகைகளை வெளியூர் காவல் துறையினர் அத்து மீறி எடுத்து செல்கின்றனர். இதை கண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிப்பது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீடாமங்கலம் வர்த்தகர் சங்கம் சார்பில் உதவிகள் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கவுரவ தலைவர் ராஜப்பா ,அசரப் அலி , சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர். பொருளாளர் ரமேஷ் சிந்து சுப்ரமணியன், அன்பரசு, சண்முகம் , சர்புதீன் ,ஜேம்ஸ் சதிஷ் குணா , சிவ பிரபாகரன் , சேகர் பாகோ ராஜன் சங்கர் , ஜெயபால் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் நகை கடை அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். வேணு அண்ணாதுரை நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

ten + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi