தஞ்சாவூர், டிச.20: இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப்பண்பாட்டு மையம் சார்பில் அபிராமி அந்தாதி நிகழ்ச்சி தஞ்சாவூர் மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
முன்னதாக தென்னக பண்பாட்டு மைய நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். நிகழ்ச்சியின் துவக்கமாக மன்னார்குடி கலை இளமணி அமிர்த வர்ஷினி குழுவினரின் வாத்திய கச்சேரி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அபிராமி அந்தாதி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் கலந்து கொண்டு பாடல் பாடினர். இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தென்னக பண்பாட்டு மைய அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.