Friday, June 14, 2024
Home » தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

by kannappan

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று உருவாகலாம் என கணிக்கப்பட்ட நிலையில், காலதாமதமாக உருவாகிறது. வட கிழக்கு பருவ காற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  நேற்று ராமநாதபுரம், புதுக்கோட்டை ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது.  அதே போல இன்றும் இந்த இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் . வருகிற 20-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை,  காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.  இதன் காரணமாக வருகின்ற 19-ம் தேதி வரை பூமத்தியரேகை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம்,  20-ம் தேதி வரை குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மாசுக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வீசக்கூடும் என்றும்  தெரிவித்துள்ளது….

You may also like

Leave a Comment

four + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi