தென்காசி, டிச.13: தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாமல் ஓய்வுபெற்றுள்ள பட்டு வளர்ச்சி துறை தினக்கூலி மற்றும் காலம் முறை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி நாராயணன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சங்கரி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் சலீம் முகமது மீரான் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், போக்குவரத்து துறை ஓய்வூதியர் சங்கம் தானுமூர்த்தி வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் நிறைவுறையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் மோகனசுந்தரம் நன்றி கூறினார்.
தென்காசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
previous post