சிவகாசி, மே 6: சிவகாசி அருகே தூய்மை பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன்(54). இவர் ஊராட்சி தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர், பிள்ளையார் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் கணேசன் மற்றும் அழகர்சாமி ஆகியோர் உன்னால்தான் எங்கள் அண்ணனின் குடும்பம் கெட்டு விட்டது என்று தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் அடிப்டையில் சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.