தூத்துக்குடி: தூத்துக்குடி யூனியன் கூட்டம் தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி யூனியன் கூட்டம் யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஓ.க்கள் வசந்தா, ஹெலன் பொன்மனி, துணை சேர்மன் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 2023-24ம் ஆண்டிற்கான 15வது நிதிக்குழு மானியம் வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் யூனியனுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்துக்களிலுள்ள கிராமங்களுக்கு புதியதாக தார்சாலை அமைத்தல், பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், திம்மராஜபுரத்தில் வீடுகளுக்கான பைப் லைன் விஸ்தரிப்பு பணி செய்தல் மற்றும் கூட்டுடன்காடு, தளவாய்புரம், திம்மராஜபுரம், மாப்பிள்ளையூரணி பகுதிகளில் கை பம்பு அமைத்தல், உமரிக்கோட்டை திம்மராஜாபுரம், குமாரகிரி, கட்டாளங்குளம், மறவன்மடம், அய்யனடைப்பு, முடிவைத்தானேந்தல் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், தொம்மை சேவியர், ஆனந்தி, முத்துமாலை, அந்தோணி தனுஷ்பாலன், ஜெயகணபதி, மரியசெல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகசுந்தரி, தமிழ்செல்வி, செல்வராணி, தினகரன் உட்பட பலர் கலந்து தூத்துக்குடி கொண்டனர்