ஸ்பிக்நகர், மார்ச் 27: தூத்துக்குடியில் சகோதரர்களை தாக்கிய 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். தூத்துக்குடி முள்ளக்காடு நேசமணி நகர் பகுதியைச் சேர்ந்த மரிய வின்சன்ட் மகன் அருள்ராஜ்(35).
இவரது அண்ணனான ஸ்டாலின் (39) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சக்திமுருகன் மற்றும் சதீஷ் குமாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அருள்ராஜ் மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த சக்தி முருகன், சதீஷ்குமார், ஜெயசேகர், சின்னப்பழம் உள்ளிட்ட 4 பேரும் அருள்ராஜ், ஸ்டாலின் ஆகிய இருவரையும் அவதூறாக பேசியதோடு சரமாரியாகத் தாக்கினராம். இதில் காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த முத்தையாபுரம் போலீசார், தாக்குதலில் ஏற்பட்ட 4 பேரையும் கைது செய்தனர்.