தூத்துக்குடி, பிப்.11: தூத்துக்குடி- பாளை ரோட்டில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சிவசுப்பு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட்அன்பரசி தலைமையில் எஸ்எஸ்ஐ கதிரேசன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
இதில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு அருகேயுள்ள காமராஜ்நகரைச் சேர்ந்த சண்முகவேல் மகன் இளங்கோவன் (33) என்பவர் சட்ட விரோதமாக விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததுதெரியவந்தது.