Thursday, May 16, 2024
Home » தூங்கிய பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

தூங்கிய பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

by Arun Kumar

 

நீடாமங்கலம், பிப். 8: நீடாமங்கலம் போலீஸ் சரகம் வடகாரவயல் ஊராட்சி ராஜப்பையன்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி விஜயலட்சுமி (43). நாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று அதிகாலை விஜயலட்சுமி தனது வீட்டில் மகன் மற்றும் மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அது சமயம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து வீட்டிற்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சம்பவம் குறித்து விஜயலட்சுமி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi