Friday, May 17, 2024
Home » தூக்குப்போட்டு கணவர் தற்கொலை போலீசார் விசாரணை மனைவி 2வது திருமணம் செய்ததால் வேதனை

தூக்குப்போட்டு கணவர் தற்கொலை போலீசார் விசாரணை மனைவி 2வது திருமணம் செய்ததால் வேதனை

by Karthik Yash

செய்யாறு, மார்ச் 5: செய்யாறு அருகே மனைவி 2வது திருமணம் செய்து கொண்டதால் வேதனை அடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பெருங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(32), கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனகோட்டி. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக 5 மாதங்களுக்கு முன்பு தனகோட்டி கணவர் சந்தோஷை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இந்நிலையில், கடந்த வாரம் தனகோட்டி வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டதாக கணவர் சந்தோஷூக்கு தகவல் கிடைத்தது. இதனால் மனவேதனையில் இருந்த சந்தோஷ் கடந்த 2ம் தேதி இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 நாட்களாக சந்தோஷ் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், நேற்று அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

19 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi