Sunday, June 16, 2024
Home » தூக்கில் காதல் ஜோடி சடலம் இளம்பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் பரபரப்பு-போலீசார் தீவிர விசாரணை

தூக்கில் காதல் ஜோடி சடலம் இளம்பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் பரபரப்பு-போலீசார் தீவிர விசாரணை

by kannappan

நாகர்கோவில் :  நாகர்கோவிலில் ஒரே சேலையில் தூக்கு போட்டு காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவத்தில் இளம் பெண்ணின்  உடலில் காயம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டம்  மருங்கூர் இசக்கியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தான். இவரது  மகன் வேணு மோகன்(24). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 4ம்  ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவரும் மருங்கூர் ராமபுரம் பகுதியை  சேர்ந்த செல்லம்பிள்ளையின் மகள் உமாகவுரி(21) என்பவரும் பள்ளி பருவம் முதல்  காதலித்து வந்துள்ளனர்.  முத்துலெட்சுமி தனது  மகள்கள் உமாகவுரி, உமா  காயத்திரி(23) ஆகியோருடன் நாகர்கோவில்  சிதம்பரம்  நகரில்  வாடகை வீட்டில் வசித்து வந்தார்.  உமாகவுரியும், வேணுமோகனும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை உமாகவுரி வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து அலறல்  சத்தகம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை  சேர்ந்தவர்கள் முத்துலெட்சுமியின் வீட்டை பார்த்துள்ளனர். அப்போது வீட்டில்  உள்ள மின்விசிறி கொழுத்தில் ஒரே சேலையில் உமாகவுரியும், வேணுமோகனும்  தொங்கிக்கொண்டு இருந்தனர். தூக்கில் தொங்கிய அறையில் ஒரு நாற்காலி உடைந்து கிடந்தது.  மேலும் கதவின் அருகே இருந்த கல் ஒன்று வேறு இடத்தில் கிடந்துள்ளது.  உமாகவுரியின் தலை பகுதியில் காயம் இருந்தது. கன்னத்திலும், கையால் அடிபட்ட தடம் இருந்துள்ளது. எனவே காதல் ஜோடிகளுக்குள் தகராறு ஏற்பட்டு, ஒருவர் முதலில் தற்கொலை செய்து கொள்ள மற்றொருவரும், அதே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்….

You may also like

Leave a Comment

16 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi