துறையூர், செப்.12: துறையூரில் தியாகி இமானுவேல் சேகரன் வீரவணக்க நினைவேந்தல் நடைபெற்றது. துறையூர் பேருந்து நிலையம் முன்பு தியாகி இமானுவேல் சேகரன் 66ம் ஆண்டு வீரவணக்க நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு ஸ்டாலின்குமார் எம்எல்ஏ தலைமையில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஒன்றியகுழு தலைவர் சரண்யா, துறையூர் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, சிவசரவணன், வீரபத்திரன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்துச்செல்வன், அசோகன், அரசு ஆதிதிராவிட அமைப்பு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ், தலைமைப் பொதுக்குழு கிட்டப்பா, பூபதி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, மாவட்ட மகளிர் அணி துணைதலைவி கிருபா, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், கார்த்திகேயன், உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் விசிக சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.