துறையூர், ஜூன் 10: திருச்சி மாவட்டம், துறையூரில் பேருந்து நிலையம் அருகே சாலையோரக் கடையில் நேற்றுமுன்தினம் இரவு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீணை அணைத்தனர். துறையூர் பேருந்துநிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் சரவணன் (35) என்பவர் திருச்சி சாலையோரம் சின்ன ஏரியின் கிழக்கு கரையில் டிபன் கடை வைத்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு இவர் கடையை மூடிவிட்டு சென்றார். பின்னர் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நிமிடத்தில் டிபன் கடையின் மேற்கூரையில் தீப்பற்றி அருகிலுள்ள பூக்கடையிலும் தீ பரவியது. இதுகுறித்து தகவலறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.