சென்னை: தி.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பணம் பட்டுவாடா நடந்த அசோக் நகர் சங்கமம் ஓட்டல் அருகே நேற்று காலை திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் சென்று பார்த்தனர். அப்போது அதிமுகவை சேர்ந்து 13 பேர் வீடுகள்தோறும் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தெரியவந்தது. உடனே திமுகவினர் பணம் பட்டுவாடா செய்த 10 அதிமுகவினரை பிடித்தனர். பணத்துடன் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பிடிபட்ட அதிமுகவை சேர்ந்த 10 பேரையும் திமுகவினர் அசோக் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணம் பட்டுவாடா குறித்து போலீசார் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தி.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியிடமும் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்….