வேதாரண்யம்: வேதாரண்யம் நகராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வானவில் மையம் பாலின மையத்தினை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி ஆகியோர் திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் வானவில் மையம் பாலின மையத்தினை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி ஆகியோர் திறந்து வைத்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பாலின பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்வு காண்பதற்கு வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது, இது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பிரச்சனைகள் அடையாளம் கண்டு அதற்கு தீர்வு காண்பதே பாலின வள மையம் ஆகும்.