Friday, May 17, 2024
Home » திருவோணம் தாலுகா உதயமானது குறைதீர் கூட்டத்தில் குவிந்த 500 மனுக்கள்

திருவோணம் தாலுகா உதயமானது குறைதீர் கூட்டத்தில் குவிந்த 500 மனுக்கள்

by MuthuKumar

தஞ்சாவூர், மார்ச் 5: தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 500 மனுக்கள் அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர், உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi