திருவையாறு, ஜூன் 10: ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் தலைமையில் நடந்தது. ஒன்றிய குழு துணைத்தலைவர் சக்தி அசோகன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) வெங்கடாசலம், கவுன்சிலர்கள் ஜெயசீலன், பாஸ்கர, அய்யாசாமி, முகம்மது இக்பால், உமா, விஜயா, நவமணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,
பணிமேற்பார்வையாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்; கூட்டத்தில் 15வது நிதிக்குழு மான்ய நிதி உள்ளிட்ட திட்ட நிதிகளில் குடிநீர் பணிகள் சாலைப்பணிகள், தெருவிளக்கு பணிகள் தடுப்புச்சுவர் படித்துறை கட்டுதல் உள்ளிட்ட பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் சக்தி அசோகன் நன்றி கூறினார்.